பைக்- வேன் மோதல் : இளம் பெண் சாவு – வாலிபர் படுகாயம்..

கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி . இவரது மகன் பார்த்திபன் ( வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தஞ்சை மாவட்டம் பின்னாயூர் மேல தெருவை சேர்ந்த திருசெல்வம் மகள் கவி பாரதியுடன் ( வயது 24) மோட்டார் சைக்கிளில் போத்தனூர் – வெள்ளலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள காமராஜர் புரம் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது . இதில் பைக்கில் பின்னால் இருந்த கவி பாரதி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.பைக் ஓட்டி வந்த பார்த்திபன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் பார்த்திபன் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வேன் ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம்,திருவையாறு சங்கர் ( வயது 40) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.