கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை.!!

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், குமரன் நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி தங்கமணி ( வயது 70)அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார் .நேற்று இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சிகரெட் வேண்டும் என்று கேட்டனர். அந்த மூதாட்டி பின்னால் திரும்பி சிகரெட் எடுக்கும் போது கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து தங்கமணி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துகொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.