சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம், அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 55) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர் . இது குறித்து விஜயலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..