குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய 2 வியாபாரிகள் மீது வழக்குபதிவு..!

கோவை மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு மேலாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கணபதி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பழக்கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக வியாபாரி பூபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் கம்பங்கூழ் கடையில் சிறுவனை வேலைக்கு வைத்திருந்ததாக அதன் உரிமையாளர் கணபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..