பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..!

கோவை சிங்காநல்லூரில் உள்ள நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் கோவிந்ராஜ். இவரது மகன் ஜெபராஜ் (வயது 35) இவர் கடந்த 23ஆம் தேதி (ஞாயிறு) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்திற்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் 6 கைக்கடிகாரம் 2 செல்போன் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜெபராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..