கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி – கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி – கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம். 

கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பட்டு வருகிறது.

கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை பறவை காய்ச்சல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலம்ஆலப்புழாவில் உள்ள பன்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன் சுமார் 1500 வாத்துகள் திடிரென உயிரிழந்தது. மேலும் உயிரழந்த வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால் அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்திள்ளது. பறவை காய்ச்சல் பரவல் காரணமாக கேரளா அருகே உள்ள கோவை மாவட்ட எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம், சோதனைச் சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் இந்த கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவையில் உள்ள கோழிப் பன்னைகளிலும் கண்காணிப்பு நடந்து வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த கண்காணிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.