குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு , வி.சி. வி. வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30 ) இவரது மனைவி பெயர் கீர்த்திகா (வயது 26) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. இதனால் சதீஷ்குமார் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் அவரது மனைவி கீர்த்திகா நேற்று பொள்ளாச்சியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சதீஷ்குமார் அவரது பெற்றோர் வீட்டில் வேட்டியை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.