சிங்காநல்லூரில் பங்களா வாடகைக்கு எடுத்து விபச்சாரம் – நடிகை உட்பட 5 பேர் கைது.!!

கோவை சிங்காநல்லூர் கஸ்தூரிபாய் காந்தி நகர், முதல் வீதியில் உள்ள ஒரு பங்களாவில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அங்கிருந்த 2 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை நடத்தி வந்த துடியலூர் நரசிம்மநாயக்கன்பாளையம் , பூச்சியூரை சேர்ந்த கணேஷ் மனைவி கனகவல்லி என்ற மது (வயது 28) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ,சிலும்பா கவுண்டனூர் பாளையம் சதீஷ்குமார் மனைவி பாரதி ( வயது 29) அப்பநாய்க்கன்பாளையம் ,ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்த கணேஷ் (வயது 38) ஆர். எஸ். புரம். காந்தி சேர்ந்த முருகன் ( வயது 43 )நீலி கோணாம்பாளையம் ஆர் .கே .கே. நகர் ஜஸ்டின் ( வயது 42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பாரதி மாடலிங் மற்றும் நடிப்பு தொழில் செய்து வருகிறார். இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..