வாலிபர் தலையில் கல்லால் தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது..!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம அம்மன் காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 28 )கூலி தொழிலாளி. இவர் நேற்று அம்மன் காலணி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முரளி என்ற முஜி (வயது 36) இவரிடம் முன் விரோதம் காரணமாக தகராறு செய்தார். பின்னர் ரஞ்சித்  குமாரை கல்லால் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து முரளி என்ற முஜியை கைது செய்தனர். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன..