கோவையில் புதிய காவல் நிலையம்- கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்..!

கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதில் கோவை தெற்கு பகுதி துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், உதவி போலீஸ் கமிஷனர் ரகுபதி ராஜா, போக்குவரத்து உதவி கமிஷனர் அருள்முருகன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன். உட்பட பலர் கலந்து கொண்டனர்..