தூங்கும் போது பாம்பு கடித்து தொழிலாளி பரிதாப பலி..

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள சொக்கம்பாளையம், காந்தி காலனி சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48)கூலி தொழிலாளி.நேற்று இவரது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது. இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.