தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தந்தி ஆபீஸ் முன்பிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு சப்கலெக்டர் கௌரவ்குமார், தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தூத்துக்குடி ...
டெல்லி: லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டெல்லியிலும் பெங்களூரிலும் ஆலோசனை நடத்துகின்றன. இந்த இரு அணிகளிலும் இணைத்து கொள்ளப்படா கட்சிகள் மதில் மேல் பூனைகளாக எந்த பக்கமும் தாவும் நிலையில் இருக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கான களப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் முன்னெடுத்து வருகின்றன. மத்தியில் ...
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...
சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் 20 மணி நேரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். முந்தைய திமுக ஆட்சியின்போது செம்மண் குவாரியை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை ...
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு கடந்த ஜூன் 21 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் ...
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..’ என பாட்டுப்பாடி அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஏ.வ.வேலு ,அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதன் ...
தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் விழுப்புரம் சண்முகபுர காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் இரண்டு கார்களில் ஒரு பெண் அமலாக்கத்துறை அதிகாரி உட்பட ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு காவல்துறையில் போக்குவரத்து சீரமைப்பு,போதை பொருள் ஒழிப்பு,ரவுடிகள் அட்டகாசம் அறவே இல்லாது ஒழிப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க பொது மக்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு இதற்கு முன் முதல் தளத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது.இதனால் அந்த வழியாக நடந்து ...
கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஜோகோவிச், மெத்வ தேவ் (ரஷ்யா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்டெபானோஸ் (கிரீஸ்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் இன்று நடைபெற்ற இறுதி ...