தீபாவளிக்கு துணி எடுக்க கோவை கடைவீதிக்கு சென்ற வாலிபருக்கு அடி,உதை – 4 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை ஒண்டிப் புதூர்,எஸ். ஐ. எச். எஸ் காலனியை சேர்ந்தவர் குமார், இவரது மகன் சந்தோஷ் ராம்( வயது 21) இவர் நேற்று தீபாவளி துணி எடுப்பதற்காக ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணி கடைக்கு சென்றார்.அவரை அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் வழிமறித்து தங்கள் கடைக்கு வருமாறு கூவி அழைத்தனர். அவர் செல்லாததால் அவரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடைவீதி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆசிக் காஜா உசேன் உட்பட 4 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.