தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஓடும் ரயில்களிலோ அனைத்து ரயில் நிலையங்களிலோ சட்ட விரோதமாக பணங்களோ விலை மதிப்பில்லாத பரிசு பொருட்களோ கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என என தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவை பிறப்பித்து இருந்தார். அதன் பேரில் தமிழக ரயில்வே போலீஸ் டி ஐ ஜி ...

நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் தேதி அறிவிக்கும் போது தமிழ்நாட்டில் முதற்கட்டமாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ...

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர் . இதில் ஒருவர் மட்டும் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து ...

ரூ.9 லட்சத்திற்கு ஆசைப்பட்டு கல்லூரியில் படித்து வரும் சக வகுப்பு தோழியை கடத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 22 வயது பொறியியல் கல்லூரி மாணவி வகோலி பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். ...

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக சிறைபிடிப்பது, படகுகளை அரசுடைமையாக்குவது போன்ற சட்டங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் நேற்றைய ...

சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ...

கோவை வடவள்ளி அருகே உள்ள அஜ்ஜனூரில் பாரதிய வித்ய பவன் பப்ளிக் ஸ்கூல் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு நேற்று ” இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது . அதில் பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து பள்ளிக்கூட முதல்வர் ஜெயலதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் ...

கோவை தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது 13 வயது மகள் பூப்பு ஏய்தி உள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர் துரைராஜ் ( வயது 52). சிறுமியின் பெற்றோர்கள் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியூர் சென்றிருந்தனர். இந்த நேரத்தில் துரைராஜ் சிறுமியின் வீட்டினுள் புகுந்து கதவை பூட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். ...

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி ( வயது 48) சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை ராமமூர்த்தி ரோடு. பிரைட் கார்டனை சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி கனகலட்சுமி ஆகியோரிடம் 1000 கிராம் தங்கத்தை கொடுத்து ஆரம், ஜிமிக்கி போன்ற நகைகள் செய்யுமாறு கூறினாராம். அவர்கள் ...

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சின்னமணி ( வயது 70) கணவர் ஆறுமுகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சின்னமணி சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள் கிருஷ்ணவேணியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தாராம். இதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். ...