அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து : 5 பேர் பலி – ஒருவர் கவலைக்கிடம்..

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர் . இதில் ஒருவர் மட்டும் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து காரில் 60ம் கல்யாணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு அதன் பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர் ஓலப்பாளையத்தில் அவர்கள் சென்ற காரின் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதை அடுத்து பெரும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் காரில் சென்ற இளவரசன் (26), சந்திரசேகரன் (60), சித்ரா(57), அறிவித்ரா(30), சாக்சி 5 பேரும் உயிரிழந்தனர்.

விபத்தில் சசிதரன் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.60ம் கல்யாணத்திற்காக திருக்கடையூர் சென்றுவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த கோர விபத்து காரணமாக 4 மணி நேரமாக கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.