13 வயது சிறுமி பலாத்காரம் – போக்ஸோவில் பக்கத்து வீட்டுக்காரர் கைது.!!

கோவை தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது 13 வயது மகள் பூப்பு ஏய்தி உள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர் துரைராஜ் ( வயது 52). சிறுமியின் பெற்றோர்கள் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியூர் சென்றிருந்தனர். இந்த நேரத்தில் துரைராஜ் சிறுமியின் வீட்டினுள் புகுந்து கதவை பூட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா வழக்கு பதிவு செய்து துரைராஜை கைது செய்தார் . இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..