ரூ.40 லட்சம் தங்கம் மோசடி – கோவை தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு.!!

கோவை பெரிய கடை வீதியை சேர்ந்தவர் மாயாண்டி ( வயது 48) சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை ராமமூர்த்தி ரோடு. பிரைட் கார்டனை சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி கனகலட்சுமி ஆகியோரிடம் 1000 கிராம் தங்கத்தை கொடுத்து ஆரம், ஜிமிக்கி போன்ற நகைகள் செய்யுமாறு கூறினாராம். அவர்கள் 25 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக உறுதியளித்து தங்கத்தை வாங்கினார்கள். அதன்படி நகை செய்து கொடுக்கவில்லை. தங்கத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து மாயாண்டி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சசிகலா, சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் சிவக்குமார் அவரது மனைவி கனகலட்சுமி ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.