இன்றும், நாளையும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளும் ...
தலைமைச் செயலகத்தில், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதை நோக்கமாக கொண்டு இதற்கென அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் எனது கைபேசி எண்ணை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழு ...
சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி ...
1945-ம் ஆண்டு மருந்து விதிகளின் அட்டவணை எச்1-ன் கீழ் “பிரிகாபாலின்” மருந்து பட்டியலிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு 20 மே 2026 அன்று, இந்திய சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே பிரிகாபாலின் மருந்தின் தவறான பயன்பாடு குறித்து சில மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ...
ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து, ‘அக்னி-1’ என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாகச் சோதித்து மற்றொரு முக்கிய பாதுகாப்பு சாதனையை எட்டியுள்ளது. ராணுவத்தின் உத்திசார் படைகளின் கட்டளை மையத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, ஏவுகணை தனது இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியது. நிலத்திலும் கடலிலும் ...
கோயில் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கவும், அறநிலையத்துறை நிர்வாகத்தைச் சீரமைக்கவும் அமைச்சர் ரமேஷ் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கோயில்களில் மேற்கொள்ளப்படும் குடமுழுக்கு விழாக்கள் மற்றும் புனரமைப்புப் ...
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான பி.கே. சேகர்பாபு மீது சென்னை கடற்கரை காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட ...
இனிவரும் காலங்களில் தமிழக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில்தான் கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் உறுதியளித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார். ...
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ் 2, தவெக 21 என மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட இந்த அமைச்சரவையில் 20-30 வயதில் 2 பேரும், 30-40 வயதில் 9 பேரும் உள்ளனர். 28 வயது கமலி கால்நடைத் துறை அமைச்சராக இளம் அமைச்சராக உயர்ந்துள்ளார்; ...
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை உள்பட பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு குறித்த கேள்விக்கும் அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் அறிவிக்கப்படாத ...













