தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அரசு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வந்தார். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது, கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3.31 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ...

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமனம் செய்து அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.நம் அண்டை நாடான இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது. இதனால், மின் உற்பத்தி தடை, விலைவாசி உயர்வு என, மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து ...

கள்ளக்குறிச்சி மாணவி உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய பெற்றோர் தொடர்ந்து ...

இந்தியாவின் 15வதுகுடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடி இன் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவைத் தேர்ந்தெடுத்தது. ...

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது. கடந்த ஜூலை 11- ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது என்று, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த ...

சென்னை: அடுத்த மாதம் மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நீர்வளத்துறை துரைமுருகன் மற்றும் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். 2022-23- ம் ஆண்டுக்கான நிதிவருவாய் உள்ளிட்ட விசயங்கள் குறித்தும் ...

தெலுங்கானா மாநிலம், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (23). இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.எம் நிறுவனத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தீனா, தன்னுடைய முயற்சியால் யூ-டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் ஆன்லைன் விளையாட்டு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவர் உருவாக்கிய யூ-டியூப் ...

அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால் திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சொத்து வரி, மின்சாரம், பால் என அனைத்தையும் விலை உயர்த்தியது தான் தி.மு.க. அரசின் சாதனை. தவறை சுட்டிக் காட்டினாலும், பாடம் கற்றுக் கொள்ளத் ...

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தோட்டங்களில் பலா மரங்கள், மூங்கில்கள் அதிகளவில் உள்ளது. தற்போது பலா சீசன் தொடங்கி உள்ளதால், மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக கடந்த சில வாரங்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதை மற்றும் கோத்திகிரி-மேட்டுப்பாளையம் சாலைகளில் ...