மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை-தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3.31 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது. மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூ.20 லட்சமாக மானியம் உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சி முகாம் தினப்படி, சீருடை படி ஆகியவை உயர்வு என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், தேசிய அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி வந்த நிலையில், தற்போது மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் அரசு வழங்கப்படும் என்று தமிழக அதிரடியாக அறிவித்துள்ளது..