மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தபின் முதல்முறையாக மும்பை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பில் அத்துமீறல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை மீறிச் சென்ற ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மகாராஷ்டிராவில் இதுவரை சிவேசனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாதி அரசு ஆட்சியில் இருந்தபோது பாஜக மூத்த தலைவர் அமித் ...

72 நாட்களுக்கு பின் அதிமுக அலுவலகத்திற்கு சென்ற ஈபிஎஸ். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்திற்கு பின், கடந்த ஜூலை 21-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு ...

வாஷிங்டன்: பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது. அவர் எனது நல்ல நண்பரும் கூட என்று அடுக்கடுக்காக இந்தியாவுக்கும், மோடிக்கும் பாராட்டுகளைக் குவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் ...

சென்னை: நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களை வாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக ...

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரலாறு காணாத அளவுக்கு மதுவிற்பனை உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த் 5 நாட்களில் மட்டும் ரூ324 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இந்தியாவிலேயே தமிழகம்தான் குடிகார மாநிலம்; குடிகாரர்களை தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கிறது; மதுபானங்கள் விற்பனையில்தான் தமிழ்நாடு அரசே இயங்கிக் கொண்டிருக்கிறது; திராவிட கட்சிகள்தான் குடிகார மாநிலமாக தமிழ்நாட்டை சிதைத்துவிட்டது ...

கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகளில் , ஓரே கழிவறையினை ...

திருவனந்தபுரம்: மகாபலி மன்னன் மக்களை சந்திக்க வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு அத்தப் பூக்கோலமிட்டு மன்னனை வரவேற்பார்கள். கேரள மாதமான சிங்ஙம் மாதத்தில் அத்தம் நாளில் இருந்து திருவோணம் வரை 10 நாள் மலையாளிகள் தங்களது வீடுகளின் முன் பூக்கோலம் இடுவார்கள். ...

முசிறி : திருச்சி மாவட்டம் முசிறியில் நாயக்கர் காலத்து நான்கு செப்பு பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்து சமய அறநிலையத்துறையில் மண்டல தொல்லியல் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆமூர் நாக.கணேசன்.இவர் இப்பகுதியில் உள்ள கோயில்களை ஆய்வு செய்தபோது இந்த சிறப்பு வாய்ந்த பட்டயங்கள் தெரிய வந்தது. முசிறி சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயிலில் இச்செப்பு பட்டயங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ...

தமிழகத்தில் சென்னை, கோவை, உதகை, திருப்பூர், குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணத்தை உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். மலையாள மொழி பேசுவோர், ஓணம் பண்டிகையை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆன்மிக வரலாற்றின் அடிப்படையில், மன்னன் மஹாபலியை வரவேற்கும் விதமாக, ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில், மலையாள மொழி ...

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சி ...