தென் கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததாக கூறி, இரண்டு சிறுவர்களுக்கு வடகொரிய ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு அரச ஊடகம் சொல்லும் செய்தியை மட்டுமே மக்கள் பார்க்கவும், கேட்கவும் வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த ...

கோவை மாநகர வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் மதிவாணன், இவர் கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனராக மாறுதலாகி சென்று உள்ளார்.இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய துணை போலீஸ் கமிஷனராக சந்தீஷ் நியமிக்கபட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு 28 வயதாகிறது .ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். ஐ.பி.எஸ். பட்டம் பெற்றவர்.இவர் ...

சென்னை: குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் பா.ஜ.,வுக்கே ஓட்டளிப்பதாக, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி தெரிவித்துள்ளார்.குஜராத்தில், தேர்தல் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்ய நாடெங்கும் இருந்து, மகளிரணி நிர்வாகிகள் வந்து இருந்தனர். அவர்களின் பிரசாரத்தை ஒருங்கிணைக்கவும், மகளிரணி தேசிய தலைவர் என்ற முறையில் பிரசாரம் செய்யவும், 10 ...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்பட ஒரு சில முக்கிய ...

சென்னை: அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார். திமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இதன்பிறகு இன்று (நவ.7) காலை ...

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 43 வார்டுகளிலும், பாஜக 36 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4ம் தேதி அன்று நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மும்முனை ...

பெய்ஜிங்: சீனாவின் சில நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், இன்னும் பல நகரங்களில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை எதிர்த்து சீனாவின் நான்ஜிங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சீனாவில் கரோனா தொற்று மீண்டு அதிகரித்ததால், அங்கு ஊரடங்கு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளை ...

பெங்களூரு: மகாராஷ்டிரா அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி, அம்மாநில வாகனங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா இடையே பெலகாவி எல்லை பிரச்னை நீண்ட காலமாக நீடிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா ...

சென்னை: நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழகம் முழுவதும் 852 டாஸ்மாக் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அவ்வப்போது மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பெரும்பாலான ...