நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு – தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட போது யானைகள் சென்றுவர தேசிய ...

கோலை : தென்னக ரயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை – கோவை விரைவு ரயில் வருகிற 16-ஆம் தேதி முதல் போத்தனூா் வரை இயக்கப்படும். சேலம் ரயில்வே கோட்டத்தில் போத்தனூா் – கோவை இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக, பழனி வழியாக இயக்கப்படும் மதுரை – ...

கோவை : தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே காட்டூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஒருவர் ...

கோவை கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் ...

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு கூட்டரங்கத்தில் 60-வது ஜாயிண்ட் டெக்னாலஜிகல் கான்பரன்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜவுளி, ஆயத்த உற்பத்தியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. ஜவுளித்துறை ஆராய்ச்சியில் தமிழகம் சிறப்பாக செயலாற்றி ...

கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த ...

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு – சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சந்தேகப்படும்படி சிங்கப்பூரிலிருந்து வந்த 4 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அவர்களிடமிருந்து 7.50 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் ...

கோவை : சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இது வடக்கு வடமேற்க்காக நகர்ந்து மன்னார் வளைகுடா வருகை தரும். இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். மிக கன மழை பெய்யும் இடங்கள் :சென்னை ...

கோவையில் தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு வருமானத்தில் அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் வருமான வரி செலுத்தும் வரம்பு ரூ. 5 லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது. ...

கோவை வெறைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர் சூரியபிரகாஷ் என்பவருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மணிகண்டன் மற்றும் சூரிய பிரகாஷ், அவரை ...