இரும்பு தடியால் மனைவியை தாக்கிய குடிகார கணவன் கைது..!

கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்தவர் திருமலை கண்ணன் .சென்ட்ரிங் தொழிலாளி.இவரது மனைவி மணிமேகலை ( வயது 37 )இவர்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம், குலமங்கலம் பக்கம் உள்ள தாயம்பட்டி. திருமலை கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். மணிமேகலை டெய்லர் வேலை செய்து வருகிறார்.தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக மணிமேகலை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி சந்திப்பில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த கணவர் திருமலை கண்ணன் மணிமேகலையின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மணிமேகலை செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் திருமலை கண்ணன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.