பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய இருவர் மீது வழக்குபதிவு..!

கோவை செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து( வயது 33) இவர் பேஸ்புக்கில் இரு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டு வகையில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் புகார் செய்தார் .போலீசார் நாச்சிமுத்து மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

இதேபோல சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த நந்தா .இவரும் கலவரம் தூண்டும் வகையில் பேஸ்புக்கில் அவதூறு பரப்பினாராம் . இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் நந்தா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.