மளிகைக் கடை மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்து பணம் திருட்டு..!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெயபால் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து அவர் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்