ட்விட்டரில் ட்விட் செய்வதற்கான எழுத்துக்களின் அளவு 280-இல் இருந்து 4 ஆயிரமாக அதிகரிக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். ட்விட்டரில், ட்விட் செய்வதற்கான அளவு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்து இருந்தார். அதில், ஆம் என்று குறிப்பிட்டு இருந்தார். 2017 வாக்கில் ட்விட் அளவை 280 ஆக அதிகரிக்கும் முன் ...

சென்னை: சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பின்னர் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் கணேஷ்புரத்தைச் சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 63) இவர் அங்குள்ள வண்ணார் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முரளி நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த தடை செய்யப்பட்ட 3-ம் நம்பர் ...

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.1.25லட்சம் கோடி கறுப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளது, ரூ.4,600 கோடி முறைகேடான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எந்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நிர்வாக முறை குறித்து டெல்லியில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் ...

திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம். திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசை கண்டித்து மாநகராட்சி நகராட்சிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ...

இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பினரும் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். அசாமில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் 3 நாட்கள் பயிலரங்கு குவஹாட்டியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் ...

சேலம்: மேட்டூர் அணையின் நீர் வரத்து 7,600 கன‌ அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரித்துள்ளது. மாண்டஸ் புயல் கரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .மேட்டூர் அணை உள்ளிட்ட இடங்களீல் மழை பெய்து ...

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்க, பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜா பட்டேரியாவை மத்தியப் பிரதேச போலீஸார் இன்று கைது செய்தனர். தாமோ மாவட்டத்தில் உள்ள ஹதா நகரில் உள்ள அவரின் வீட்டில் ராஜா பட்டேரியா இருந்தபோது இன்று அவரை ...

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சுவுகான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார். அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் ராஜ்நாத்சிங் வீட்டிலேயே இந்த ஆலோசனை நடைபெற்றது. இதற்கிடையே, சீன எல்லையில் இந்திய வீரர்கள் ...

திருவண்ணாமலை அருகே, மனைவி, மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளிட்ட 6 பேரை வெட்டிக் கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவருடைய மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி ...