இருகூரில் ஆம்புலன்ஸ் டிரைவரை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொல்ல முயற்சி – கும்பலுக்கு வலை..!

கோவை அருகே உள்ள இருகூர் ,தீபம் நகரை சேர்ந்தவர் முகமது யூனுஸ் ( வயது 20) இவர் அதே ஊரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..நேற்று இவர் ஆம்புலன்சில் திருப்பூரில் இருந்து ஒரு நோயாளி ஏற்றிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டு இருகூர் வந்தார். அங்கு வேன் உரிமையாளர் பாபுவுடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் முகமது யூனூசிடம் எங்களை உன் நண்பர்களுடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் அருகில் வைத்து நீதானே அடித்தாய்? என்று கூறி தகராறு செய்தது . பின்னர் அவரை அரிவாளாலும், கத்தியாலும் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு 7 இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது . இதில் தொடர்புடைய சுரேந்திரன், மணி, நித்திஷ். பிரவீன், அஜித் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள் .இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.