ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி : அலாரம் ஒலித்ததால் திருடன் தப்பி ஓட்டம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டியில் இந்தியன் வங்கி கிளை உள்ளது.இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு அபாய அலாரம் ஒலித்தது.இந்த தகவல் வங்கி கிளை மேலாளர் ஜெபசேகருக்கு மெசேஜ் மூலம் சென்றது.உடனே மேனேஜர் ஜெபசேகர் அங்கு விரைந்து சென்றார்.இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் மேனேஜர் ஜெபசேகர் புகார் செய்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர் யார்? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.