சவாரி ஏற்றி சென்ற ஆட்டோவை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல் – 4 பேர் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சோமனூர் ரோட்டில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42) ஆட்டோ டிரைவர். இவர் கருமத்தம்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வருகிறார் .நேற்று அவரது ஆட்டோவில் பெண்களை ஏற்றிக்கொண்டு செம்மாண்டம் பாளையம் – ஆனந்தபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த 4 பேர் ஆட்டோ வழிமறித்தனர். அவரை தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியால் தாக்கினார்கள் ..இதில் செல்வகுமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது செல்வகுமார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செம்மாண்டம் பாளையம், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 32) வெங்கடேஸ்வரன் ( வயது 26) லோகநாதன் (வயது 34) கணேசன் (வயது 23) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.