இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.111.5 கோடி போதைப்பொருள் பறிமுதல் – திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிரடி.!!

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மீமீசல் அருகே உள்ள இறால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில், ரூ.1.05 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா என மொத்தமாக ரூ.111.5 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்த இருப்பதாக இருந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மத்திய நுண்ணறிவு போலீஸ் அதிகாரிகள் பொருளை பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்துல் வைத்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப்பொருளின் உரிமையாளரை தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.