கோவை வழக்கறிஞர் மீது தாக்குதல்- சகோதரர்கள் இருவர் கைது..!

கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 38.) வழக்கறிஞர். இவருக்கு சொந்தமான வீடு ஒக்கிலியர் வீதியில் உள்ளது .இதை என்.எச். ரோட்டில் கடையை நடத்தி வரும் சச்சிதானந்தம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு சச்சிதானந்தம் வீட்டை காலி செய்துவிட்டார். இதற்கு இடையில் அந்த வீட்டிற்கு புதிதாக வாடகைக்கு குடி வந்தவர்களிடம் சச்சிதானந்தம் வீட்டின் உரிமையாளரான வழக்கறிஞர் தினேஷ் குமாரை பற்றி தவறாக கூறினாராம். இதை அறிந்த தினேஷ் குமார் அவரிடம் இது குறித்து கேட்கச் சென்றார். அப்போது தினேஷ் குமாருக்கும், சச்சிதானந்தம்,அவருடைய சகோதரர் குணசீலன்  ஆகியோருக்கும் இடையை தகராறு ஏற்பட்டது .இதில் தினேஷ் குமார் தாக்கப்பட்டார் .இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சிதானந்தம் ‘அவரது தம்பி குணசீலன் ஆகியோரை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.