போதை மாத்திரை கேட்டு தகராறு: மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து-போதை ஊசி மர்ம கும்பலுக்கு வலை வீச்சு ..!

கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச்.எஸ் காலனி, கருணாநிதி நகரை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 39 )இவர் அந்த பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.நேற்று இரவு 10.30 அளவில் இவரது கடைக்கு ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் சென்றது.அவர்கள் போதைக்கு பயன்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரை உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரண மாத்திரை கொடுக்க முடியாது என்றார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன்குமாரை இடது கையில் குத்தினார் .இதில் மோகன் குமார் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.படுகாயம் அடைந்த மோகன் குமார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோவில் தப்பிய 4 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.