கோவையில் புதிய காவல் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள்-சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம்.!!

கோவையில் கரும்புக்கடை ,சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதை வருகிற 26 ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இந்த புதிய போலீஸ் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவை ஆர். எஸ். புரம்,போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, கோவை தெற்குபகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன் சுந்தராபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்..இவர்கள் தவிர குனியமுத்தூர் போலீஸ் நிலையம் சப் இன்ஸ்பெக்டர் முருகன், கரும்புக்கடை காவல் நிலையத்திற்கும் போத்தனூர் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் சுந்தராபுரத்திற்கும், உக்கடம்சப் இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் காட்டூர் சப்- இன்ஸ்பெக்டர்சந்திரமூர்த்தி ஆகியோர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்..