கோவை செங்கல் சூளையில் 60 கிலோ இரும்பு பிளேட் திருட்டு- தொழிலாளி கைது.!!

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது68) வீரபாண்டி பிரிவில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது சூளையில் இருந்த 60 கிலோ இரும்பு பிளேட்டை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து நரசிம்மன் தடாகம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தினர். விசாரணையில் வீரபாண்டி அய்யாச்சாமி கோவில் வீதியைச் சேர்ந்த சுரேஷ் ( வயது 37) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் .60 கிலோ இரும்பு பிளேட் மீட்கப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது..