கோவை இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

கோவை குனியமுத்தூரில் கடந்த 23ஆம் தேதி இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர் .இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது .இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் என்ற அம்ரிஷ் கான் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர் .அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.