கோவை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் தலையில் கல்லை போட்டு அடையாளம் தெரியாத ஒருவர் படுகொலை – போலீசார் விசாரணை..

கோவை கணபதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு இன்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .பேண்ட்- சட்டை அணிந்து உள்ளார். அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? என்றுஅடையாளம் தெரியவில்லை.இவரது உடல் அருகே தரையில் பதிக்கக்கூடிய பெரிய கல்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை யாரோ தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கபடுகிறது.