பணிபுரியும் தனியார் நிறுவனத்திலேயே தீ குளித்து ஊழியர் தற்கொலை ..

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் சதீஷ்குமார் (வயது 34) அங் குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.மனைவி நந்தினி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி  அடைந்த சதீஷ்குமார் நேற்று அவர் வேலை பார்த்து வரும் நிறுவனத்தில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனலிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி நந்தினி பிரியா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.