விமானப்படை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை..

கோவை புலியகுளம் பெரியார் நகரில் வசிப்பவர் சிவம் குப்தா (வயது 31) இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ரெட் பீல்டில் உள்ள விமானப் படைத் தளத்தில் வீரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வைஷ்ணவி குப்தா ( வயது 26) இவர்களுக்கு2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது முன்தினம் இரவில் கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டுதூங்கச் சென்றனர். நேற்று காலையில் சிவம் குப்தா பார்த்தபோது அவரது மனைவி பால்கனி மேற்கூறையில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை..இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.