காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி..

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூலக்காடு மலைவாழ் குடியிருப்பு பெருமாள் கோவில் அருகே நேற்று காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இறந்தவர் செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 60) என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இவர் அங்குள்ள கோவில் அருகே தினந்தோறும் உறங்குவது வழக்கம். நேற்று அந்த பகுதிக்கு வந்த ஒற்றை யானை தாக்கி இவர் இறந்தது தெரியவந்தது .இந்த ஒற்றையானை அந்த பகுதியில் சில நாட்களாக சுற்றி வருவதால் அங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.