அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..!

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட தொட்டம்பாளையம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ரவி வரவேற்றார். முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமை தாங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செல்வம், முன்னாள் எம்பி காளியப்பன், முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் தமிழ்செல்வி, தலைமை கழக பேச்சாளர் துரைசாமி,  ஒன்றிய செயலாளர்கள்  வி.ஏ.பழனிச்சாமி,  டி.எஸ். பழனிச்சாமி, மாரப்பன், சிவராஜ்,  நாச்சிமுத்து, நகர செயலாளர்கள் சுப்பிரமணியம், மூர்த்தி,   பேரூர் செயலாளர்கள் செல்வம், தேவமுத்து, நடராஜ்,  விவசாய அணி சோமு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி துரைசாமி,  ஊராட்சி தலைவர்கள் தொப்பம்பாளையம் உமாமகேஸ்வரி நாகேந்திரன், நல்லூர் மூர்த்தி, காரப்பாடி ராமசாமி, கொத்தமங்கலம் மல்லிகா, பனையம்பள்ளி நாகேந்திரன், சிக்கரசம்பாளையம் சுப்பிரமணி, கொமாரபாளையம் சரவணன், துணை தலைவர் சண்முகம்,  மாவட்ட கவுன்சிலர்கள் தங்கராஜ், பிரபாகரன், ஒன்றிய  நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, தங்கராஜ், வசந்தாமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் நாராயணசாமி நன்றி கூறினார்.