கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை செட்டி வீதி ,கே.சி, தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் இறந்து விட்டார். இவரது 17 வயது மகள் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் சி. ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி இவரது தாயார் தனது மூத்த மகள் திருமணத்திற்கு பட்டு எடுப்பதற்காக துணி கடைக்கு சென்று விட்டார். 17 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. மேஜையில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் என்னை தேட வேண்டாம் .நான் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.  அதில் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தாயார் விதுகுமாரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.