கோவை ரயிலில் துணிகரம்… பயணியிடம் 10 பவுன் செயின் திருடிய நபர் கைது..!

கோவை :சேலம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி ( வயது 64) இவர் தனது மனைவியுடன் பாலக்காட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக கோர்பாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் திருப்பூருக்கும் கோவைக்கும் இடையே சென்ற போது அவரது கைப்பையை காணவில்லை.அதில் 10 பவுன் நகை இருந்தது. இது குறித்து கோவை ரயில்வே போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த பையை திருடிய ஆசாமி நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கோவை குறிச்சி பிள்ளையார்புரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் ( வயது 44) என்பது தெரியவந்தது .அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள் செல்போன் மோடம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.