கொள்ளையர்களை ஜீப்பில் துரத்திச் சென்ற போது விபத்து – கோவை இன்ஸ்பெக்டர் படுகாயம்..

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்றிரவு தென்னம்பாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தினார். அவர்கள் நிற்காமல் சென்றதால் ஜீப்பில் துரத்திச் சென்றார். அப்போது ஜீப் ரோட்டில் உள்ள டிவைடரில் மோதியது. இதில் அவரது இடது கை,தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கொள்ளையர்கள் சென்ற வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் சோதனை செய்த போது பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..