கோவையில் ஒரே நாளில் குடிபோதையில் தூக்கு போட்டு 3 பேர் தற்கொலை..

கோவையில் மது போதையால் வெவ்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கோவை அருகே உள்ள குறிச்சிபிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 53) இவர் மின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணேசன் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துஅவரது மனைவி கவிதா சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சைமன் ( வயது 45) இவரும் குடிப்பழக்கம் உடையவர் .கணவன்- மனைவிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை விட்டு பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வருகிறார் .இந்த நிலையில் நேற்று குடிபோதையில் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லைசா சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல பீளமேடு,ஹட்கோ காலனி, முருகன் நகரை சேர்ந்தவர் மகேஷ் ( வயது 34)குழந்தைகள் இல்லை . இவர் “இ “சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார் . குடிப்பழக்கம் உடையவர் .கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சுரேகா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்..