கோவையில் சுட்டெரிக்கும் வெயிலில் பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸ்காரர்களுக்கு புரூட் சாலட் வழங்கும் இளைஞர்..!

கோவை : கோடைகாலம் தொடங்கிவிட்டது வெயிலும் சுட்டெரிக்கிறது. கோவையில் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓரு இளைஞர் தினமும் புரூட் சாலட் வழங்கி வருகிறார்.அந்த இளைஞர் பெயர் கார்த்திக் .. அவரது சொந்த ஊர் சேலம் தற்போது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உப்பிலிபாளையத்தில் வசிக்கிறார் .சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . தினமும் காலை முதல் மதியம் வரை சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் நாளொன்றுக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் போலீஸ்காரர்கள் 90 பேருக்கு ப்ரூட் சாலட் கொடுத்து வருகிறார். 3 மாதங்களாக இந்த பணியை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஆதரவற்றோருக்கும் உணவு வழங்கி வருகிறார். இந்த இளைஞரின் தன்னலமற்ற சேவையை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்..