ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த பெண்ணை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், இவர் இறந்துவிட்டார் . இவரது மனைவி சாந்தமணி (வயது69) இவர் நேற்று குறிச்சியிலிருந்து ஒப்பணக்கார வீதிக்கு இலவச பேருந்தில் பயணம் செய்தார்.பஸ் ஸ்டாப்பில் இவர் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை ஒரு பெண் நைசாக திருடினார். இதை பார்த்து சாந்தாமணி சத்தம் போட்டார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள்,பொதுமக்கள் சேர்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். அவர் கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒப் படைக்கப்பட்டார் .போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச். எஸ் காலனியை சேர்ந்த சுடலை மனைவி அம்மாச்சி ஈஸ்வரி (வயது 33 )என்பது தெரிய வந்தது. 2 பவுன் செயின் மீட்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது..