கோவையில் மகளுடன் இளம் தாய் திடீர் மாயம்..!

கோவை செட்டிபாளையம் அருகே உள்ள ஓராட்டுக் குப்பை ‘நேரு நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி வளர்மதி (வயது 28 )இவர்களுக்கு மணிஷா (வயது 5 )என்ற மகள் உள்ளார்.சிலம்பரசன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த வளர்மதி தனது மகள் மனிஷாவுடன் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து செட்டிபாளையம் போலீசில்புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.