காவல் நிலையத்தில் தீ குளிக்க முயன்ற தொழிலாளி கைது..!

கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் அபுதாகீர் ( வயது 42) கூலி தொழிலாளி. இவரது மகன் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இவர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சூரிபதியிடம் தகராறு செய்தார் .பின்னர் அவர் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸ் காரர்கள் அவரை தடுத்தனர். . பின்னர் அவரை கைது செய்தனர்.