கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் குழந்தையுடன் இளம்தாய் எங்கோ மாயம்..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பழனியூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி தேவி ( வயது 25) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் தேவி கடந்த 6 மாதமாக ஒருவருடன் செல்போனில் நட்பு வைத்து பழகி வந்தார்.இதை சிவகுமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த தேவி தனது கணவருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு 2வயது குழந்தை யாழினியுடன் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து சிவக்குமார் கோட்டூர் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.